Wednesday, August 28, 2013

பெண்ணே ! உன்னால் என் வீட்டு வெற்று
காகிதங்கள் கவிதை கரு சுமக்குதடி

நிலா சோறு

இரவில் வீட்டினுள்ளேயே இருந்துவிடாதே
உன்னை காட்டி  தன் பிள்ளைக்கு சோறூட்ட
நிலவு காத்திருக்கிறது !  

Sunday, July 7, 2013

நிதர்சனம்

திரைகடல் ஓடியும்  திரவியம் தேடு என்பார்கள்
திரைகடல் தாண்டிய பின்பே தெரிகிறது
திரவியத்தை விட்டு வந்து இங்கு வேறெதையோ
தேடிகொண்டிருக்கிறோம் என்று !  

மற்றும் சில

ஒரு கணம் பார்வையால் கொள்ளுவாள்
மறு கணம் புன்னைகையால் உயிர் கொடுப்பாள்  

Thursday, January 19, 2012

புயல்

புயல் கடந்த பின் அங்கு அமைதி நிலவும்
ஆனால் நீ அமைதியாக கடந்தபின்
தான் என்னுள் புயலே கிளம்புகிறது

கண்ணீர் தாமரை

என் கண்ணீர் தெப்பத்தில்
மலர்ந்த தாமரை அவள்
அவள் வாடாமல் இருக்க
அழுதுகொண்டே இருக்கிறேன் நான்

Monday, May 9, 2011

தேவதைகள் வசிக்கும் தெருவுக்கு 
உன் பெயர் தானடி சூட்ட வேண்டும்.